ரச்சிதாவுடன் இணைந்து வாழத்தான் ஆசைப்பட்டேன் .. ஆனால்? கண்கலங்கிய நடிகர் தினேஷ்..

dhinesh
dhinesh

சின்னத்திரையில் ஏராளமான பிரபலங்கள் தங்களுடன் இணைந்து நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதில் ஒரு சில பிரபலங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்தாலும் ஏராளமான பிரபலங்கள் விவாகரத்து பெற்று பிரிவது வழக்கமாக இருக்கிறது மேலும் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் சம்யுக்தா-விஷ்ணுகாந்த் இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்த 15 நாட்களிலேயே விவாகரத்து பெற்றிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு தங்களுடன் இணைந்து நடிக்கும் நடிகையை நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் இது மிகப்பெரிய தவறு என கூறப்படுகிறது. அதாவது நடிகர்கள் அந்த சீரியலில் கேரக்டருக்கு ஏற்ற போல் நடிகை நடித்துவரும் நிலையில் அதே கேரக்டரை காதலிக்கிறார்கள் ஆனால் அந்த நடிகைகளுடைய நிஜ கேரக்டர் வேராக இருக்கும்.

எனவே இது நடிகைகளுடைய தவறு கிடையாது நடிகர்களின் கண்ணோட்டம் தான் இவ்வாறு அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் தான் தற்பொழுது தினேஷ் ரச்சிதா மகாலட்சுமி இவர்களுடைய திருமண வாழ்க்கையும் கரடு முரடாக இருந்து வந்துள்ளது.

அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் ஜோடியாக சேர்ந்து நடித்த இவர்கள் பிறகு காதலிக்க தொடங்கினார். எனவே சில காலங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த சீரியலுக்கு பிறகு ரட்சிதா சரவணன் மீனாட்சி சீரியல் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

இவ்வாறு சின்னத்திரையின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ரச்சிதா சமீபத்தில் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தினேஷ் சமீபத்தில் நான் ரச்சிதாவுடன் இணைந்து வாழவே ஆசைப்படுகிறேன் எனக் கூறிய கண்கலங்கி உள்ளார்.

அதாவது அவர் கூறுகையில் நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம் இரண்டு வருடமாக அவரிடம் சமாதானம் ஆகிவிடலாம் என்று பலமுறை அவருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கேன் ஆனால் அவற்றில் ஒன்றுக்கு கூட ரச்சிதா எனக்கு பதில் அனுப்பியது இல்லை அப்படி தான் இப்பொழுதும் அனுப்பினேன் அதில் ஆபாசமோ, திட்டிய மெசேஜோ அனுப்பவில்லை.

ஆனால் அவர் காவல் நிலையத்தில் நடந்து கொண்டதை பார்க்கும் பொழுது இனி சேர்ந்து வாய்ப்பே இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன் என தினேஷ் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.