அந்த இயக்குனருடன் சேர்ந்து ஒரு படமாவது பண்ண வேண்டும் – நடிகர் துருவ் விக்ரம் ஆசை.!

நடிப்பிற்கு பெயர் போன சியான் விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் விகரமும் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து பிரபலமடைந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற திரை படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் அவரது அப்பா விக்ரமுடன் கைகோர்த்து துருவ் விக்ரம் மகான் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் புகழ்ந்து பேசப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களுக்கு எந்த இயக்குனரிடம் கதை கேட்டு நடிக்க விருப்பம் என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு துருவ் விக்ரம் பதில் அளித்தது தனக்கு பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இதுவரை வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் போன்ற அனைத்து படங்களுமே ஹிட் அடித்த நிலையில் அவரது இயக்கத்தில் தற்போது விடுதலை திரைப்படமும் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது.

எனவே அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பது நன்றாகவே தெரிய வருகிறது அவரது படத்தில் இணைந்து பணியாற்ற ரொம்ப ஆசை என துருவ் விக்ரம் கூறியுள்ளார். துரு விக்ரமும் சினிமா ஆரம்பத்திலேயே தனது முழு திறமையை வெளிக்காட்ட ரெடியாக இருக்கிறார் அதற்கு ஏற்றார் போல சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்ப்பது மிக முக்கியமானது தான்.

அந்த வகையில் நீங்களும் வெற்றி மாறனும் இணைந்தால் அந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என ரசிகர்கள் தற்பொழுது சொல்லி வருகின்றனர் நிச்சயம் நீங்கள் பேசுவது வெற்றிமாறன் காதுகளில் விழும் நீங்கள் இணைவது வெகு விரைவிலேயே நடக்கும் என கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment