நடிகர் தனுஷ்க்கு அணு அணுவாக டார்ச்சர் கொடுத்த முன்னாள் மனைவி .. இதோ அவரே கூறிய தகவல்

நடிகர் தனுஷ் தமிழ் திரை உலகில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாத்தி 100 கோடி வசூலை நெருங்கி ஓடிக்கொண்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் போன்ற படங்களில் படும் பிஸியாக நடித்து வருகிறார்.

திரையுலகில் இப்படி ஜொலிக்கும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். தொடர்ந்து சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் சேர்ந்து சூப்பராக பயணித்த இந்த ஜோடி சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தது.

அதன் பிறகு இருவரும் தனக்கென ஒரு வழியை பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவும், தனுஷும் இணைந்து 3 என்னும் திரைப்படத்தில் பணியாற்றினர். அந்த படம் வெளிவந்து அப்பொழுது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இப்பொழுதும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் விழா ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ் மற்றும் மனைவி ஸ்வர்யா கலந்து கொண்டனர். அப்போது நடிகர் தனுஷ் மனைவி கொடுத்த டார்ச்சர் பற்றி விளையாட்டாக அப்பொழுது சொன்னார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. படத்தின் மொத்த அதிகாரம் இயக்குனர் என்பதால், அதை பயன்படுத்திக்கொண்டு ஐஸ்வர்யா தன்னை ரொம்ப டார்ச்சல் செய்தார் எனவும்..

சும்மா எடுத்ததற்கெல்லாம் இங்கே வா.. அங்க போ.. என தன்னை அழைத்தார் எனவும் கிண்டலாக தெரிவித்தார் ஆனால் இதனை ஐஸ்வர்யா முற்றிலுமாக மறுத்தார். ஆனால் 3 படத்தில் இருந்து தான் இருவருக்கும் இடையே  பிரச்சனை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை வெடித்து பின் பூதாகரமாக மாறி இருவரும் பிரிந்து இருப்பார்கள் என ஒரு பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version