நடிகர் தனுஷ் பார்த்து வைத்திருந்த கதையை.. நைசாக சுட்ட சூர்யா..? இதெல்லாம் எங்க போய் முடியுமோ..

நடிகர் சூர்யா அண்மை காலமாக வித்தியாசமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த படங்களும் வெற்றி படங்களாக அமைகின்றன இப்பொழுது கூட நடிகர் சூர்யா வணங்கான் படத்தை பாதியிலேயே போட்டுவிட்டு சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ஒரு சரித்திர கதையை மையமாக வைத்து இருக்கும் என சொல்லப்படுகிறது.. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி சரித்திர நாவலை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சூர்யா நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் சூர்யாவிற்கு முன்பாகவே இந்த கதையில் நடிகர் தனுஷ் நடிக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆம் 2019 ஆம் ஆண்டு இதற்கான வேலைகள் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக கைவிடப்பட்டது அதன் பிறகு ஷங்கர் இதை எடுக்க வேலை பார்த்து வருகிறார் அதில் கதாநாயகனாக சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் கார்த்தியின் விருமன்..

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா மற்றும் எழுத்தாளர் சு வெங்கடேசன் கலந்து கொண்டு உறுதிப்படுத்தினர் அப்பொழுது பேசிய சூர்யா நாவல் கதைகள் தமிழர்களுக்கு முக்கியமானது குறிப்பாக வேள்பாரி நாவலை படமாக எடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் அது குறித்து வெகு விரைவிலேயே அறிவிப்போம்  என சொல்லி உள்ளனர்.

மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் ஒரு வரலாற்று கதை என்பதால் இந்த படம் மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பை பெறுகிறது என்பதை நன்கு பார்த்துவிட்டு அதன் பிறகு வேள்பாரி படத்தை எப்படி எடுக்கலாம் எப்படி கொண்டு போய் சேர்க்கலாம் என்கின்ற விவாதத்துடன் படத்தை எடுக்க திட்டமிடுவார்கள் என சொல்லப்படுகிறது.

Leave a Comment