பாகுபலி வெர்ஷனில் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த போகும் நடிகர் தனுஷ்..! அட அப்படி என்ன படம் பா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவோர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தொடர்ந்து தோல்வியை மட்டும் சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இன் நிலையில் வெகு நாளாக கிடப்பில் போட்ட திரைப்படம் ஒன்றை நடிகர் தனுஷ் மீண்டும் கையில் எடுத்துள்ளார் அதாவது தனுஷ் அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது நான் ருத்ரன் என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்க போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவை அப்படியே கிடப்பில் இருந்து விட்டது.

அதன் பிறகு தனுஷ் அவர்கள் பா பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ருத்ரன் படத்தின் சூட்டிங் தொடங்கி சில நாட்கள் நடைபெற்ற நிலையில் ஏதோ சில காரணத்தினால் அவை நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் நாகர்ஜுனா சரத்குமார் ஸ்ரீகாந்த் எஸ் ஜே சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிக்க இருந்தனர்.

dhanush-033
dhanush-033

மேலும் இது திரைப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் ஸ்டுடியோ தமிழ் மட்டும் தெலுங்கில் தயாரிக்க இருந்தது மேலும் இந்த திரைப்படம் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படம் பாகுபலி போல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் தனுஷ் மீண்டும் இந்த திரைப்படத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது அதேபோல தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மிக விரைவில் ஒன்று சேர்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment