இதற்கு மேல் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் எனக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சீயான் விக்ரம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விக்ரம் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.மேலும் இவர் நடிப்பை வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறார்.

இவருடைய நடிப்பு திறமையினால் இவரை இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பை வெளிவரும் அனைத்து திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கு ஏற்றார் போல் உடலை வருத்திக்கொண்டு மாற்றுவார் மேலும் எடுத்துக்காட்டாக ஐ திரைப்படத்தில் பல கஷ்டங்கலுக்கு பிறகு தன்னுடைய உருவத்தை மாற்றினார்.

தற்போது இவருடைய நடிப்பில் பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சோழா சோழா பாடலில் உள்ள விக்ரம் இருக்கும் போஸ்டர் மற்றும் வீடியோ ஆகியவை வெளியானது. இந்நிலையில் இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சியான் விக்ரம் தன்னுடைய ஓய்வு பற்றி சில தகவல்களை கூறியுள்ளார்.

அதாவது மணிரத்தினம் மற்றும் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படங்களில் முடித்துவிட்டு பிறகு நடிப்பை நிறுத்தி விட போவதாக கூறியுள்ளார். சில காலங்களுக்கு முன்பு உடலில் சில பிரச்சனைகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உடல்நிலை சரியானதும் படத்தில் நடிப்பதை தொடங்கினார்.

இவ்வாறு தன்னுடைய உடல் நலத்தை கருதி இதற்கு மேல் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்க முடிவெடுத்துள்ளார் சியான் விக்ரம். இவ்வாறு இவர் கூறியது பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவருடைய இடத்தினை அவருடைய மகன் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment