அடேய் அனுஷ்கா டா என துள்ளிக் குதிக்கும் நடிகர் சிரஞ்சீவி.! எதற்காக தெரியுமா..

Anushka : தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடித்து வரும் இவருடைய முதல் திரைப்படம் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த “சூப்பர்” என்னும் தெலுங்கு திரைப்படமாகும். இவர் தமிழில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த “ரெண்டு” என்ற திரைப்படத்தின்  மூலம் அறிமுகமானாவர். மேலும்  தமிழில் அருந்ததி, வேட்டைக்காரன்,  சிங்கம்,  வானம், தெய்வத்திருமகள், சகுனி,  பாகுபலி, தாண்டவம்,  சிங்கம் 2,  பாகுபலி 2 போன்ற பல வெற்றி படங்களில் நடிகை அனுஷ்கா நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் நடிகை அனுஷ்கா  சுமாரான கவர்ச்சி நடிகையாக அறிமுகமான இவர் “அருந்ததி” திரைப்படத்தில் தனது முழு நடிப்பு திறனையும் அள்ளிக் கொடுத்துள்ளார் என்று  தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இத்திரைப்படம் அவருக்கு மிகப்பிரமாண்ட வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல்  ரசிகர்கள் மத்தியில்    நீங்க  இடத்தை பிடிக்க உதவியது மறுக்க முடியாத உண்மைதான்.

மேலும் “பாகுபலி ” திரைப்படத்தில் ஒரு வயதான அடிமைப்பெண் வேடத்தில்  நடித்து ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் மூழ்கடித்தார். இத்திரைப்படதில் பிரம்மாண்டமான வெற்றியின் உச்சியை தொட்ட நடிகை அனுஷ்கா  தனக்கு கிடைத்த இந்த வெற்றி வாய்ப்பினை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது நடிகை அனுஷ்கா தான் தவறவிட்ட இடத்தை பிடிக்க போராடி வரும் நிலையில்  இளம் நடிகரான நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஸ்ட்டி” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் ஒரு சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் தெலுங்கு திரைப்பட  நடிகர் மற்றும் அரசியல்வாதியான  சிரஞ்சீவிக்காகவே இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்று காட்டப்பட்டது.

இந்தப் படத்தை பார்த்த நடிகர் சிரஞ்சீவி இப்படம் ” இக்கால இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையிலும்,  நல்ல பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது” என்று பாராட்டியுள்ளார். மேலும் நடிகை அனுஷ்கா சிறு இடைவெளி விட்டு திரைக்கு வந்தாலும் இப்பொழுதும் அவர் அதே அழகுடன் இருக்கிறார் என்று நடிகை சிரஞ்சீவி அனுஷ்காவை பாராட்டி உள்ளார்.

மேலும் நடிகர்கள் சிரஞ்சீவி இந்த படத்தை  முதல் ஆளாக பார்த்து ரசித்தவன் நானே,  இந்த படம் திரையரங்கில் வெளியாகும் போது ரசிகர்களுடன் இணைந்து மீண்டும் இந்த படத்தை பார்க்க தயாராக இருக்கிறேன், இந்தப் படம் 100% ரசிகர்களை தேகத்திற்கிடமின்றி திருப்திப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.