அரண்மனை 3 படத்தை தொடர்ந்து புதிய படத்தில் இணைந்த நடிகர் ஆர்யா.! பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.! யார் யார் நடிக்கிறாங்க தெரியுமா.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் குணச்சித்திர கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர் நடிகர் ஆர்யா.  ஹீரோவாக ஆனபின் இவர் ஆக்சன், காதல், ரொமான்டிக் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் குடியேறினார். சினிமா உலகில் இப்போ வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் நல்ல படங்களாக அமைந்தன அதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திலும் அவர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்யா புதிதாக நடிக்க உள்ள திரைப்படத்தை சக்தி சௌந்தராஜன் என்பவர் இயக்கவுள்ளார் இவர் இயக்கத்தில் ஏற்கனவே நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து டேடி என்ற திரைப்படத்தில் நடித்தனர். இத்திரைப்படம் நல்லதொரு வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது அவருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தற்போது புதிய படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இதுவே அந்த படத்திற்கான வெற்றியாகவே தற்பொழுது பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஆர்யா உடன் இணைந்து பல புதுமுக மற்றும் திறமை வாய்ந்த நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன அந்த வகையில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் முன்னணி நடிகையான சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தின் பூஜையை தொடங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்யா. இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Leave a Comment