இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு.! பாதாளக் குழியில் விழுந்த நடிகர் மற்றும் நடிகைகள்.!

பொதுவாகவே சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது அவங்க எடுக்குற ஒரு சில தவறினா முடிவினால் அவர்களுடைய மொத்த சினிமா கெரியரும் தலைகீழாக மாறி இருக்கும் அந்த வகையில் இதனை சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று கூட சொல்லலாம்.

இவ்வாறு உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த சிலர் அவசரப்பட்டு சில தவறான முடிவினால் தங்களின் கெரியரையே இழந்திருப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த நடிகர், நடிகைகள் என்பதை தற்போது பார்ப்போம்.

ஸ்ரேயா: நடிகை ஸ்ரேயா 2005ஆம் ஆண்டு வெளிவந்த மழை திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் இவர் நடித்த காலகட்டத்தில் இவர் தான் முன்னணி நடிகையாக ஜொலிக்க வந்தார்.

இதனைத் தொடர்ந்து திருவிளையாடல்,சிவாஜி,அழகிய தமிழ் மகன் போன்ற ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார். இவ்வாறு மிகவும் சிறப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் இவர் வடிவேலின்  ரசிகை என்பதால் வடிவேலு நடிப்பில் வெளிவந்த இந்திரலோகத்தில் அழகப்பன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

indiralogathil-naa-still-2

அதிலிருந்தே இவருக்கு இன்று வரையிலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் இப்படத்திற்கு பிறகு இவர் குட்டி, தோரணை போன்ற படங்களில் நடித்திருந்தார் இப்படங்கள் தோல்வியை தழுவியது. இவ்வாறு காமெடி நடிகர் வடிவேலு திரைப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி தனக்கு சூனியம் வைத்துக் கொண்டார் என்று தான் கூறவேண்டும்.

அனுஷ்கா: தமிழ்,தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வந்த ஒருவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் வேட்டைக்காரன்,வானம்,சிங்கம்,உன்னைஅறிந்தால் இதனை தொடர்ந்து பாகுபலி திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார்.

அந்தவகையில் பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்காவின் சிறந்த நடிப்பை பார்த்த பல பேமஸ்சான நடிகர்கள் அனுஷ்காவை எங்கள் படத்தில் நடிக்க வையுங்கள் என்று கேட்கும் அளவிற்கு பிரபலமடைந்தார்.

inji-iduppazhagi2-600

இவ்வாறு மிகவும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அந்த கதாபாத்திரத்திற்கு குண்டாக இருக்கவேண்டும் எனவே தனது உடல் எடையை ஊட்டி மிகவும் குண்டானார். இப்படத்திற்காக இவர் தன்னை அர்ப்பணித்து இருந்தாலும் இதுவே இவருக்கு சினிமா கேரியரில் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்தது.

மோகன் : நடிகர் மோகன்க்கு அனைத்து படங்களிலும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தது பாடகர் எஸ் என் சுரேந்தர் அவர்கள் தான்.  அந்த வகையில் பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் போன்ற திரைப்படத்தில் மோகன் அவர்களுக்கு எஸ்.என் சுரேந்தர் தான் வாய்ஸ் கொடுத்தார்.

இந்த இரண்டு படமும் வெள்ளி விழா அடைந்ததால் சென்டிமென்டாக மோகன் திரைப்படங்கள் அனைத்துக்கும் எஸ்.என் சுரேந்தர் தான் பதில் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்த வகையில் எஸ்.என் சுரேந்தர் அவர்கள் கிட்டத்தட்ட 74 மோகனின் திரைப்படத்திற்கு டப்பிங் கொடுத்திருந்தார்.

இவ்வாறு இவர்கள் இருவரின் கூட்டணி மிகவும் சிறப்பாக போய்க்கொண்டு இருந்த நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சின்ன மனக்கசப்பு காரணமாக  எஸ்.என் சுரேந்தர் அன் இனிமேல் நான் மோகனுக்கு வாய்ஸ் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

Mohan-Rao

மோகனும் நீ இனிமே எனக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார். பிறகு மோகன் நடிக்கும் படங்களில் எஸ்.என் சுரேந்தர்  வாய்ஸ் கொடுக்காத காரணத்தினால் எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய அடையவில்லை. படிப்படியாக மோகனின் வெற்றி குறைந்து கொண்டே போனது.

வடிவேலு: தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்கள் கூட இவரை எங்கள் படத்தில் நடிக்க வையுங்கள் என்று கேட்கும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய காமெடி ஸ்டார் தான் நடிகர் வடிவேலு. இவர் தனது காமெடி திறமையினால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  ஆனால்  2011 எலக்சனின் போது  அரசியலில் இறங்கி நடிகர் விஜயகாந்திற்கு எதிராக பேசி தனது மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார்.

vativelu

வடிவேல் சினிமாவிற்கு வருவதற்காக ஆரம்பத்தில் விஜயகாந்தும் உதவியுள்ளார். அரசியல் என்பது மிகவும் கடுமையாக விஜயகாந்தின் மீது பல பொய்களை கூறியதால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் மொத்த வாய்ப்பு போய்விட்டது.

Leave a Comment

Exit mobile version