ரசிகையின் கலை படைப்பினை பார்த்து மகிழ்ச்சியில் நன்றி கூறிய அல்லு அர்ஜுன்.!! என்னவென்று நீங்களும் பாருங்கள்.

Allu Arjun is happy to see his fan artistic work: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த அல வைகுந்த புரமுலோ என்ற திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. குறிப்பாக புட்ட பொம்மா என்கின்ற பாடல் உலகெங்கும் பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்தது.

இதனைத்தொடர்ந்து இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் தனது இருபதாவது படமான புஷ்பாவில் நடித்து வருகிறார். இவரது தீவிர ரசிகையான வைஷ்ணவி ஆச்சார்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அந்த வீடியோவை அல்லு அர்ஜுன் பார்த்து அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார்.

அந்த வீடியோவில் வளர்ந்து வரும் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டாரான அல்லு அர்ஜுனின் குழந்தைப் பருவ புகைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அல வைகுந்த புரமுலோ வரை வெவ்வேறு படங்களின் அவரது தோற்றங்களை ஓவியமாக ஒன்றிணைத்து வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

ரசிகையின் இந்தக் கலை வண்ணத்தை பார்த்து வியந்துபோன அல்லு அர்ஜுன் “உங்களின் அனைத்து கலைப் படைப்புகளையும் பார்த்தேன். இது மிகப்பெரிய விஷயம். அனைத்து அன்பிற்கும் நன்றி” என அந்த ரசிகைக்கு பதிலளித்திருந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version