அஜித் வீட்டிலும் கைவைத்த அதிகார்கள்.. தரைமட்டம் ஆகிய சுற்றுச்சுவர்.. காரணம் என்ன?

Actor Ajith Kumar: நடிகர் அஜித் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏன் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் சுற்றுப்புற சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் திடீரென்று உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் வெளிநாடு சென்ற நேரத்தில் சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிக்கால் அமைக்கும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகிறதாம்.

இதன் காரணமாகத்தான் அஜித் வீட்டு சுற்றுச்சூழல் இடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் ஈச்சம்பாக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்த வீட்டினை கட்டினார் பல நவீன வசதிகளுடன் ரிமோட் கண்ட்ரோல் உடன் கூடிய வீடாக அமைத்துள்ளார். எனவே அனைத்து வசதிகளும் இருப்பதால் தனது குடும்பத்தினர்களுடன் நடிகர் அஜித் வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு இவர் ஆசை ஆசையாய் கட்டின வீட்டை இவ்வாறு இடித்திருக்கிறார்கள் என்பது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

அதேபோல் தான் அஜித் பல லட்சம் செலவழித்து பெரிய சுற்றுச்சுவரை அமைத்துள்ளார். மேலும் வேறு  வழியில்லாமல் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக சுற்றுச்சுவரை இடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த சாலை விரிவாக்க பணிகள் காரணமாக பகுதியில் வசிப்பவர்கள் நேரடியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.