விமான நிலையத்தில் குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு மிகப்பெரிய உதவி செய்த நடிகர் அஜித்.! மனம் உருகி பதிவு செய்த கணவர்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழப்படுபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் தான் இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிய நிலையில், இன்னும் இந்த திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருக்கிறது.

பொறுத்து பொறுத்து பார்த்த ஒரு சில ரசிகர்கள் பேனர் வைத்து லைக்கா நிறுவனத்திடம் அப்டேட் கொடுங்கள் என கேட்டு வருகிறார்கள்.  பொதுவாகவே அஜித் குமார் தனது ரசிகர்கள் இருந்தால் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டால் உடனே அவர்களிடம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் வருவார்.

இந்நிலையில் ஏர்போர்ட்டில் நடிகர் அஜித் குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு உதவியதாக அஜித்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த தகவலை இந்த பெண்ணின் கணவரே பகிர்ந்துள்ளார் ஸ்கட்லாந்தின் Glasgow நகரில் விமானத்தில் ஏறுவதற்காக இந்த பெண் குழந்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அஜித்தை பார்த்த உடனே உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என கேட்டதற்கு அஜித் அந்த பெண்ணிடம் சென்று ஒரு புகைப்படம் போஸ் கொடுத்துள்ளார். அப்பொழுது அஜித் அந்த பெண்ணின் பையை பார்த்துவிட்டு கொடுங்கள் நான் எடுத்து செல்கிறேன் என்று கூறினாராம் அதற்கு அந்த பெண் வேணாம் என கூறினாராம்.

எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறது,  எனக்கும் உங்களது கஷ்டம் தெரியும் என அந்த பெண்ணிடம் பையை வாங்கிக் கொண்டு விமானத்தில் உள்ளாரே போய் பணியாளர்களிடம் அந்தப் பெண்ணின் இருக்கைக்கு சென்று அந்த பையை வைக்க சொன்னாராம். மேலும் இந்த தகவலை அந்தப் பெண்ணின் கணவரே பகிர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment