ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற அதிரடி விளையாட்டு வீரர்.! இதோ அவரே வெளியிட்ட பதிவு…

ஐபிஎல் போட்டிகளில் வேறு எந்த அணிக்கும் விளையாடாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டுவதாக விளையாடிய வீரர் பொல்லார்ட். வெஸ்ட் இந்தியன் அணியை சேர்ந்த பொல்லார்ட் மும்பை அணியில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கினார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஐபிஎல் கோப்பைகளையும் 3 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் மும்பை அணியில் பந்துவீச்சு, பேட்டிங், பில்டிங் என்று ஆள் ரவுண்டர்ராக மும்பை அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தார் பொல்லார்ட்.

தற்போது பொல்லார்ட் அவர்கள் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் இந்த அறிக்கை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பற்றி பொல்லார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நான் விரும்புவதால் இதை எளிதான முடிவு இல்லை இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் ஊடனாக கலந்து கொண்டு உரையாடலுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று பொல்லார்ட் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் முப்பை அணி ஒரு அற்புதமான அணி பல சாதனைகளையும் மாற்றங்களையும் பெரும் என்றும் நான் இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட போவதில்லை அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரணியிலும் விளையாடப் போவதில்லை ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் என்று ஆகிவிட்டால் கடைசி வரை மும்பை இந்தியன்ஸ் தான்.

pollard
pollard

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிருச்சியாளராகவும் எமிரேட்ஸ் உடன் விளையாடவும் நான் தற்போது ஒப்புக் கொண்டுள்ளேன். அது மட்டுமல்லாமல் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று பொல்லார்ட் கூறியுள்ளார். ஐபிஎல்லில் இருந்து பொல்லார்ட் விலக உள்ளதால் ரசிகர்கள் தற்போது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment