சூர்யா 42 படகுழு வெளியிட்ட அதிரடி அறிக்கை.! உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42வது திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட் இதோ. நடிகர் சூர்யா அவர்கள் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மாஸ்தாபம் காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டார் நடிகர் சூர்யா.

அதன் பிறகு வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா அவர்கள் மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனால் இவருடைய அடுத்த படம் வாடிவாசல் ஆக தான் இருக்கும் என்று நினைத்திருந்தனர்.

ஆனால் வாடிவாசல் பக்கமே போகாமல் சிறுத்தை சிவா இயக்கும் சூரியா 42 வது படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மூலம் ஒரு அறிக்கையும் வெளியிட்டு உள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூரியா 42 திரைப்படத்தின் பரப்பிடிப்பு தற்போது 50 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்த நிலையில் மீதம் உள்ள படப்பிடிப்பு தற்போது விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்களுக்கு இயக்குனர் சிறுத்தை சிவா தயாரிப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதாவது resumesivateam@aol.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சூர்யாவுடன் நடிக்க விருப்பம் தெரிவிப்பவர்களும் நடிக்கும் ஆசை உள்ளவர்களும் திறமை உள்ளவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் போர் வீரர்களாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவின் 42வது திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment