லோகேஷ் போட்ட அதிரடி பதிவு.! உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் தளபதி ரசிகர்கள்…

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிய அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில். சில காட்சிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 500 நபர்களை தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதனால் பிரம்மாண்ட இயக்குனரையே மிஞ்சிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் அதனால் தளபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் அவர் போட்ட பதிவை விட அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பல கேள்விகளும் எழுந்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே இவர்களது கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் அதாவது லியோ படத்தில் மிஷ்கின் உடன் இணைந்து பணியாற்றியது நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் மிஸ்கின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அந்த பதிவில் வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் மிஸ்கின் எதற்காக கையில் வெள்ளை நிற கப் வைத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் ரசிகர்கள் அதுமட்டுமல்லாமல் புகைப்படம் ஏன் பிளாக் அண்ட் ஓய்டில் இருக்கிறது என்றும் கேட்டு வருகிறார்கள்.

இதோ லோகேஷ் போட்ட பதிவு…

Leave a Comment