100 கோடியை தாண்டிய வசூல்..! சூட்டோடு சூடாக நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் கதாநாயகியாக நித்யா மேனன் ராசி கண்ணா ப்ரியா பவானி சங்கர் பாரதிராஜா நடித்துள்ளார்கள்.

மேலும் சிறந்த என்டர்டைன்மெண்ட் திரைப்படம் ஆக வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தினை பார்ப்பதற்கு ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதுவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை சுமார் 100 கோடி வசூலை பெற்றுள்ளதாக சமூகவலைதள பக்கத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் தற்போது மிகப்பெரிய வெற்றிய்காண்ட நடிகர் தனுஷ் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் இதுவரை 15 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வெற்றியை பெற்றதன் காரணமாக தற்பொழுது தன்னுடைய சம்பளத்தையும் தனுஷ் உயர்த்தி விட்டாராம் அதாவது தற்பொழுது அவருடைய சம்பளம் என்னவென்றால் 22 முதல் 25 கோடி வரை உயர்த்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் பலரும் தனுஷ் செய்த இந்த முடிவு மிகவும் புத்திசாலித்தனமான முடிவு தான் என பலரும் போற்றி வருவது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கிறது.

Leave a Comment

Exit mobile version