சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியா இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! இதோ குடும்ப புகைப்படம்..

பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் இவரின் இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக சச்சின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் உத்தமபுத்திரன்,வேலாயுதம் போன்ற சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

பிறகு ஜெனிலியா தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பிறகு நடிகர் Riteish deshmukh என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் ஈடுபடாமல் முழுமையாக குடும்ப வாழ்க்கையை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் மகள், மகன் அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

jeniliya
jeniliya

Leave a Comment