கவிஞர் கண்ணதாசனிடம் அழுது புலம்பியுள்ள ஆச்சி மனோரமா.! அதுவும் எந்த விஷயத்திற்காக தெரியுமா.?

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 1000 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து மறைந்த நடிகை தான் ஆச்சி மனோரமா இவர் தமிழ் சினிமாவில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்தே தனது நடிப்பை இயல்பாக வெளிபடுத்தி கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் இவரது நடிப்பை பாராட்டும் விதமாக பல விருதுகளையும் இவர் பெற்றுவிட்டார்.

மேலும் இவர் தற்பொழுது இல்லை என்றாலும் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது.நாடகங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த ஆச்சி மனோரமா சினிமாவில் நுழைந்த போது அவருக்கு வெறும் காமெடி கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

ஆனால் இவரது தீராத ஆசை சினிமாவில் எப்படியாவது கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்பதுதானாம் இவரை காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது வேறு யாருமில்லை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான் ஆட்சி மனோரமாவிற்கு சினிமாவில் நிறைய காமெடி கதாபாத்திரம் கொடுத்தாராம்.

அதன் பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஆச்சி மனோரமா கண்ணதாசனிடம் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை எனக் கூறி அவரிடம் அதிக நேரம் அழுது புலம்பியுள்ளாராம்.கவிஞர் கண்ணதாசன் நீ சினிமாவில் கதாநாயகியாக நடித்தால் ஒரு சில வருடங்கள் மட்டுமே உன்னால் நடிக்க முடியும் ஆனால் காமெடி கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தால் வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டே இருக்கலாம் என கூறியுள்ளாராம்.

ஆனால் ஆச்சி மனோரமா சாகும் வரை சினிமாவில் நடித்துவிட்டு தான் மறைந்தார் என்பதில் எந்த ஒரு சந்தேகமே இல்லை தற்பொழுது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ஆட்சி மனோரமாவிற்கு கவிஞர் கண்ணதாசன் கூறியது தான் சரி என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்

Leave a Comment