பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க போறோம் என்று தெரியாமல் ஆடிஷன் சென்ற அபர்ணா பாலமுரளி.! சுவாரஸ்யமான தகவல்

அபர்ணா பாலமுரளி மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரைத் துறையிலும் மற்றும் பின்னணி பாடகியாகவும் பணிபுரிந்து வந்தார். இவர் இந்தியாவின் பாரம்பரியமனா இசை மற்றும் பரத நாட்டியம்,  மோகினி ஆட்டம், குச்சிப்புடி உட்பட நடன பலவகை யுத்திகளை தன் கைவசம் கொண்டுள்ளார்.

இவர்  2016ஆம் ஆண்டு  மலையாளத்தில் வெளிவந்த மகேசென்ட் பரதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். இவர் முதலில் 2013 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த யாத்திரை தொடரும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .

இதனைத் தொடர்ந்து ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, ஒரு முத்திசை காடா, மழையாய் உட்பட மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ்  இயக்கத்தில் திரை உலகிற்கு வெளிவந்த 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.

இவருக்கு சிறிது காலம் மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தமிழில் நடிக்க முடிவு செய்தாராம் அந்த நிலை இந்த 8 தோட்டாக்கள் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போகிறோம் தெரியாமல் ஆடிசன் பொய் உள்ளார் அதன் சுவாரசியத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது சூரரை போற்று திரைப்படத்தில் ஆடிஷன் நடைபெற்றது அதில் கலந்துகொண்டார் அபர்ணா பால முரளி, ஆனால் இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போறோம் என்று தெரியாமலேயே கலந்துகொண்டாராம், சூரரை போற்று படத்தைப் பற்றி அபர்ணா பாலமுரளியிடம்  கேட்கும்போது இந்த படத்தின் ஆடிசன் போன பிறகுதான் இப்படத்தின் ஹீரோ சூர்யா என தெரியும் என கூறியுள்ளார். இந்த படம் இவருக்கு மிகவும் ஸ்பெஷலாக அமைந்தது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment