கௌதம் செய்த திருட்டுத்தனத்தால் லெப்ட், ரைட் வாங்கிய வேதாச்சலம்.. நாடகமாடி புருஷனை காப்பாற்றிய ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam October 6 : எபிசோடில் கௌதமை சூர்யா கூப்பிட்டு அடையார் பிரான்சில் ஒர்க்கர்ஸ்க்கு தர வேண்டிய 10 லட்சம் பணத்தை நீ எடுத்து இருக்க அப்படி என்ன உனக்கு செலவு இனிமே நீ அந்த பிரான்ச்ச பாத்துக்க வேண்டாம் என்கூட வந்து வேலை பாரு என்று சொல்கிறார்.

அடுத்த நாள் காலையில் வேதாச்சலம் தாத்தாவிற்கு இந்த விஷயம் தெரிந்து வீட்டில் எல்லோரும் இருக்கும் பொழுது சூர்யாவிடம் ஐயப்பன் தாங்கல் பிரான்சில் ஒர்க்கர்ஸ்க்கு தரவேண்டிய 30 லட்சம் பணம் போய் சேரல அதேபோல அடையாறு பிரான்சிலும் 10 லட்சம் பணம் போய் சேரலை இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்க சூர்யா நான் தான்..

ஒரு அவசரத்துக்காக அந்த பணத்தை எடுத்தேன் என்று கௌதமை மாட்டி விடாமல் தன் மேல் பழியை போடுகிறார்.. அதனால் வேதாச்சலம் உன்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தது தப்பா போச்சு, இனிமே நீ மெயின் பிரான்ச்ச பாத்துக்க வேண்டாம், அந்த பிரான்ச்சோட எம்டி இனி கௌதம் தான் என்று சொல்லிவிட்டார் அதனால் கௌதம், சித்ராதேவி மற்றும் ஐஸ்வர்யா மூன்று பேரும் சந்தோஷப்படுகின்றனர்.

ஆனால் மகா சூர்யா மேல் எந்த தப்பும் இல்லை இது எல்லாத்துக்கும் காரணம் கெளதம் தான் நேத்து நைட்டு இவங்க இத பத்தி பேசிட்டு இருந்தத நான் கேட்டேன் என்று சொல்கிறார்.. பிறகு சூர்யா உடைய சித்தப்பாவும் ரெண்டு பிரான்ச் உடைய மேனேஜரை வர சொல்லி இருக்கேன் அவங்க வந்து உண்மைய சொன்னா தெரிஞ்சிரும் என்று சொல்கிறார்.

அதேபோல அந்த மேனேஜர் வந்து ஒர்க்கர்ஸ்க்கு தரவேண்டிய பணத்தை எடுத்தது கௌதம் தான் என்று சொல்லிவிட்டனர். பிறகு வேதாச்சலம் எம்டி பதவிக்காக சூர்யாவை கௌதம் விட்டுக் கொடுத்துவிட்டான். ஆனால் சூர்யா தம்பிக்காக தன் மேல் பழியை போட்டுக் கொண்டான் என்று பெருமையாக சொல்கிறார்.

வேதாச்சலம் கௌதமை இனிமே நீ நம்ப கம்பெனில வேலை செய்யக்கூடாது என்று சொல்ல  ஐஸ்வர்யா இந்த நேரத்துல கௌதமுக்கு வேலை போயிடுச்சுன்னா அவருக்கு வாரிசு வர நேரம் தான் இப்படி ஆயிடுச்சுன்னு எல்லாம் சொல்லுவாங்க அதனால இப்படி எல்லாம் சொல்லாதீங்க கௌதம் எங்க போவாரு என்று கெஞ்சுக்கிறார்.

பிறகு பாட்டியும் கௌதம் வெளியே போய் வேலை செஞ்சா நம்ம குடும்பத்தோட மானம் மரியாதை தான் போகும் அதனால அவன் இங்கேயே வேலை பார்க்கட்டும் என்று கேட்க  வேதாச்சலம் நீ இங்கயே வேலை பாரு, ஆனா எந்த விஷயத்தையும் நீ தனியா செய்ய கூடாது என சொல்லிவிட்டார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.