ஐஸ்வர்யாவுக்கு ஏழரை ஆரம்பிச்சுடுச்சு.. அப்பாவிடம் 50,000 கொடுத்து குடும்பத்தை பார்க்க சொன்ன மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode november 23 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா குட்டியோண்டு டிரசை போட்டுக் கொண்டு ஷூட்டிங் போறேன் என கிளம்புகிறார்.. பிறகு சித்ராதேவியும் கௌதமும் மறைந்திருந்து பார்த்து இப்ப யாராவது ஐஸ்வர்யாவை பாக்கணும் அப்புறம் தான் வீட்ல பிரச்சனை இருக்கு என்று நினைக்கிறார்கள்.

அவர்கள் நினைத்தது போல் காயத்ரி ஐஸ்வர்யாவை பார்த்து என்ன ஐஸ்வர்யா இதெல்லாம் இந்த மாதிரி டிரஸ் பண்ணிட்டு வெளியே போற என்று கேட்க ஏன் இந்த மாதிரி டிரஸ் பண்ணா என்ன இப்ப, எந்த ஜெனரேஷன்ல இருக்கீங்க.. உங்க பையன் விஜய்க்கு கல்யாணம் ஆகி உங்க மருமக இந்த மாதிரி டிரஸ் பண்ணா அவளை கேள்வி கேட்டா அவ்வளவு தான்..

மன்சூர் அலிகான் போல ரஜினிக்கு அந்த நடிகையின் மீது ஆசை.? பகீர் கிளப்பிய பிரபலம்

தாலிய கழட்டி கொடுத்துட்டு வீட்டை விட்டு போயிடு வா என்று ஐஸ்வர்யா காயத்ரியை ரொம்ப கேவலமாக திட்டி விட்டு சென்று விட்டார்.. இதைப் பார்த்து சித்திரா தேவி காயத்ரிக்கு இதெல்லாம் தேவை தான் என்று நினைத்து பிறகு காயத்ரியிடம் போய் என்ன சோகமா ஒக்காந்து இருக்க என்று கேட்க உன் மருமகள் மார்டன் டிரஸ் போட்டுட்டு வெளிய போனா ஏன் இப்படி டிரஸ் பண்ணி இருக்கன்னு கேட்டதுக்கு என்னை அசிங்கப்படுத்திட்டு போயிட்டா என்று சொல்ல..

ஐஸ்வர்யா உன்னை எதிர்த்து பேசிட்டாளா அவ வரட்டும் இன்னைக்கு நான் பாத்துக்குறேன் என்று எல்லோரையும் கூப்பிட்டு ஐஸ்வர்யா மாடர்ன் டிரஸ் போட்டு போயிருக்கா அதை ஏன்னு கேட்டதுக்கு காயத்ரிவே திட்டிட்டு போயிருக்கா அவ என்ன நெனச்சிட்டு இருக்கா இன்னைக்கு வரட்டும் அவளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார்.

அஜித் படத்துடன் போட்டி போட்டு ஜெயித்த தங்கர் பச்சான்.! இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும்பா..

அடுத்து மகாவும், சூர்யாவும் காரில் கோடீஸ்வரி வீட்டிற்கு போய் கொண்டு இருக்கின்றனர் அப்பொழுது போற வழியில் சூர்யா மகாவுக்கு பூ வாங்கி கொடுக்கிறார்.. அவங்க அம்மா வீட்டில் சூர்யா டிரா பண்ணிவிட்டு எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.. அடுத்து கோடீஸ்வரி தசாதனிடம் நம்ம வீட்டு நிலைமை இப்ப ரொம்ப மோசமா இருக்கு என்று தோடை கழட்டி கொடுத்து..

இதை வச்சு வீட்டு செலவ பாருங்க என கொடுக்கிறார். அப்பொழுது மகாவும் உள்ளே வந்து அம்மா என்று கூப்பிட எல்லோரும் மகாவை பார்த்து என்ன போன் பண்ண, வீட்டுக்கு வரேன்னு சொல்லவே இல்லையே என்று சந்தோஷப்படுகின்றனர்.. பிறகு மகா நான் உங்களுக்காக பணம் எடுத்துட்டு வந்திருக்கேன் என்று 50 ஆயிரம் பணத்தை கையில் கொடுக்க தசாதரன் வாங்க யோசிக்கிறார்..

பிறகு மகா இது நான் சூர்யா ஆபீஸ்ல டிசைன் பண்ணி சம்பாதிச்ச காசு என்னோட காசு தான் இது, மத்தபடி நான் அவங்க கிட்ட காசு வாங்கவில்லை என்று சொல்கிறார்.. பிறகு தசாதரன் பொதுவா பொம்பள பிள்ளைங்க எல்லாருமே வீட்டு மகாலட்சுமி தான் ஆனா நீ நெஜமாவே எங்க மகாலட்சுமியே என்று மகாவை பார்த்த சந்தோஷப்படுகிறார்.. அடுத்து ஐஸ்வர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் இறங்கி உள்ளார். அவரை அங்கு உள்ளவர்கள் வரவேற்கின்றனர் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.