முதல்முறையாக ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றும் கௌதம்.. ஆட்டத்தை ஆரம்பித்த சித்ரா தேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode november 06 : இன்றைய எபிசோடில் விஜய் மகாவுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தார் அப்பொழுது ஒரு எஸ்ஐ மேல் மகா காரை விட்டதால் பிறகு விஜயும் மகாவும் ஸ்டேஷனில் இருந்தனர்.. சூர்யா வந்து தான் இருவரையும் வெளியில் எடுத்தார் பிறகு சூர்யா மகாவிடம் முதல்ல டூவீலர் ஒழுங்கா ஓட்ட கத்துக்கோ..

அப்புறமா கார் ஓட்டலாம் என்று சொல்வதும் விஜய் உடனே போய் ஒரு ஸ்கூட்டி எடுத்துட்டு வந்து கொடுக்கிறார்.. சூர்யா மகாவுக்கு அந்த ஸ்கூட்டியை ஒழுங்காக ஓட்ட கற்றுக் கொடுக்கிறார்.. அடுத்து பானுமதி பாட்டி டிவி ரிமோட் வொர்க் ஆகவில்லை என்று ராஜலட்சுமி இடம் சொல்ல ராஜலட்சுமி ரிமோட்டுக்கு வேறொரு பேட்டரியை தேடிக் கொண்டிருக்கிறார்.

கடை பணத்திலிருந்து 1000 ரூபாய் திருடிய செந்தில்.. இது தெரியாமல் கதிரை அடித்த அப்பா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்..

அப்பொழுது அந்த ட்ராவில் இன்ஹீலர் இருப்பதை பார்த்து இங்கே எப்படி இது வந்தது என்று ராஜலட்சுமி கேட்க பானுமதி இங்கே இல்லை எல்லா ட்ராவலையும் இன்ஹீலர் இருக்கும் மகா தான் சூர்யாவுக்காக இதை எல்லா இடத்திலும் வச்சா என்று சொல்கிறார்.. பானுமதி மகாவை பத்தி நீ இன்னும் புரிஞ்சுக்கல அவ அன்னைக்கு சூர்யாவுக்கு உடம்பு சரியில்லன்னதும் எப்படி தவிச்சு போயிட்டா தெரியுமா..

ஒரு போன் கூட யார்கிட்டயும் பண்ணி சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்டா அவ போன நீ தான் புடுங்கி வச்சுட்ட என்று சொல்ல ராஜலட்சுமி ரெண்டு குடும்பத்துக்குள்ள எந்த ஒரு உறவும் இருக்கக் கூடாதுன்னு தான் போன புடுங்கி வச்ச ஆனா இப்ப அந்த குடும்பத்திலிருந்தே இன்னொருத்தி வந்துட்டா என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சூர்யா மகா விஜய் 3 பேரும் ஒன்றாக வீட்டிற்கு வருகின்றனர்..

மீனா பண்ண காரியத்தை முத்து எப்படி மறப்பான்.. ஏத்துவிடும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்பொழுது ராஜலக்ஷ்மி மகா உடைய போனை எடுத்துட்டு வந்து கையில் கொடுக்கிறார் அதனால் மகா ரொம்ப சந்தோஷப்படுகிறார் ஆனால் இதை பார்த்து ஐஸ்வர்யா கோபமாக போகிறார் பிறகு கௌதம் ஐஸ்வர்யா கையில் ஒரு புதிய போனை கொடுத்து இதை வச்சுக்கோ என்று சொல்ல எனக்கு போன் எல்லாம் வேண்டாம்..

இந்த வீட்ல மரியாதை தான் கிடைக்கணும் அதுக்கு நான் மாடலிங் சேரனும் பெரிய செலிப்ரட்டி ஆகணும் அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் என்று சொல்கிறார் பிறகு சித்ராதேவி கௌதம் இடம் ஐஸ்வர்யா ஆசையை நிறைவேத்து என்று சொல்ல கௌதம் அவ மாடலிங்கில் அரைகுறை டிரஸ் போட்டுட்டு போட்டோ போடுவா..

இதனால நம்ம வீட்ல பிரச்சனையாகும் அப்புறம் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு துரத்திடுவாங்க என்று சொல்லி அதுதான் நமக்கு தேவை ஐஸ்வர்யா இந்த வீட்டை விட்டு போகணும் இல்ல அதுக்கு அவளே ஒரு பிளான் போட்டு கொடுத்திருக்கா அவ நினைச்ச மாதிரியே செய் என்று சித்ரா தேவி கௌதம்கிட்ட சொல்கிறார் இதோடு எபிசோட் முடிந்துள்ளது