ரவுடிகளிடம் ஐஸ்வர்யாவை கடத்தி அனுபவிக்க சொன்ன கௌதம்! பணம் திருடிய மகளை வெளுத்து வாங்கிய கோடீஸ்வரி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha Kalyanam September 19 : இன்றைய எபிசோடில் விஜய் கௌதம் ஐஸ்வர்யா கல்யாணம் செய்தி தெரிந்து பிரபாவிடம் மகா அண்ணி நினைச்சதை சாதித்துவிட்டார்கள் என்று பிரபாவை தூக்கி சுற்றுகிறார். பிறகு பிரபா கூட வந்தவங்க எல்லாரும் போய்விட்டதால் விஜய் நானே உன்னை பைக்ல வீட்ல டிராப் பண்ணிட்டு போறேன் என்று சொல்ல பிரபா விஜய் கூட பைக்ல போறாங்க..

அடுத்து கோடீஸ்வரி வீட்டில் ஐஸ்வர்யா உடைய அப்பா கல்யாணத்து செலவுக்கு பணம் என்ன பண்றது பேசாம இந்த வீட்டு அடமானம் வைத்துவிடலாமா என்று கேட்கிறார் அதற்கு கோடீஸ்வரி ஏற்கனவே வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்துள்ளதால் அதெல்லாம் வேணாங்க, இந்த ஐஸ்வர்யாவுக்காக நம்ம வீட்டை அடமானம் வைக்கணுமா அதான் சம்மந்தி வீட்டிலேயே எல்லா செலவையும் பார்த்துக்கிறேன் சொன்னாங்க இல்ல..

கொஞ்சம் செலவு தான் நமக்கு ஆகும் அதுக்கு வேணும்னா அக்கா கிட்ட பணம் வாங்கிக்கலாம், அப்புறம் கொடுத்துக்கலாம் என்று சொல்கிறார்.. பிறகு கோடீஸ்வரி வீட்டிற்கு டெலிவரி பண்ற ஒரு ஆள் வந்து இங்க பத்தாயிரத்துக்கு ஒரு பொருள் ஆர்டர் பண்ணி இருக்காங்க என்று பிரபாவிடம் கேட்க பத்தாயிரத்துக்கெல்லாம் இங்க யாரும் ஆர்டர் பண்ணி இருக்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யா வந்து நான் தான் ஆர்டர் பண்ணினேன்..

என்கிட்ட எல்லாம் பத்தாயிரம் இருக்காதா என்று பத்தாயிரம் பணம் கொடுத்துவிட்டு அந்த பொருளை வாங்குகிறார் அது என்னவென்று பிரபா கேட்க மேக்கப் கிட் நான் எவ்வளவு பெரிய வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு போறேன் அதுக்கான மேக்கப் டிரஸ் எல்லாம் நான் மாத்திக்கிறது இல்லையா, அங்க போய் மகா மாதிரி டிசன்ஸ் இல்லாமையா என்ன நடந்துக்க சொல்ற என்று சொல்ல பிரபா மகாவ பத்தி ஏதும் பேசுற வேலை வச்சுக்காத என்று சொல்கிறார்.

பிறகு வட்டிக்காரர் கோடீஸ்வரிக்கு போன் பண்ணி என்னம்மா இன்னும் பணம் கட்டல நான் வீட்டுக்கு வந்தாலும் வர வேணாம்னு சொல்றீங்க ஒழுங்கா பணத்தை எடுத்துட்டு வந்து குடுங்க என்று சொல்ல கோடீஸ்வரி இதோ பணம் எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு பிறகு கோடீஸ்வரி ஒரு இடத்தில் பத்தாயிரம் பணம் வைத்திருந்ததை போய் தேடிப் பார்க்கிறார்.

Aaha Kalyanam September 19
Aaha Kalyanam September 19

அந்த பணம் அங்கு இல்லை உடனே தன் கணவரிடம் அந்த பணத்தை பார்த்தீர்களா என்று கேட்கிறார் அவரும் இல்லை என்று சொல்ல பிரபா அந்த பணம் எங்க போச்சு என்று எனக்கு தெரியும் என ஐஸ்வர்யாவை இழுத்துட்டு வந்து இவதான் அந்த பத்தாயிரம் பணத்தை எடுத்து மேக்கப் கிட் வாங்குனா என்று சொல்ல சொந்த வீட்டிலேயே திருடுறியேடி கல்யாண செலவுக்கு வீட்டு செலவுக்கு பணம் இல்லாம நாங்க எவ்ளோ கஷ்டப்படுறோம் உனக்கு 10,000-ல மேக்கப் தேவையா என்று ஐஸ்வர்யாவை அடிக்கின்றனர்..

அடுத்து மகா சூர்யா ரூமுக்கு வந்து என் மேல தான் எந்த தப்பும் இல்லன்னு  நிரூபிச்சிட்டேன் இல்ல இந்த பெட்ல எனக்கும் பாதி உரிமை இருக்கு நான் பெட்ல தான் தூங்குவேன் என பெட்டில் வந்து உட்காருகிறார் உடனே சூர்யா என்னெல்லாம் உன் கூட தூங்க முடியாது நீ கீழ இறங்கலைன்னா நான் போய் கீழே படுத்துகிறேன் என சூர்யா கீழே தூங்குகிறான் ஆனால் சூர்யாவிற்கு கீழே தூக்கம் வரவில்லை உடனே மகா நீங்க வேணா மேல வாங்க நான் கீழ வந்து படுத்துகிறேன் என்று சொல்ல சூர்யா அதெல்லாம் வேண்டாம் என்று கீழே போய் தூங்குகிறார்..

பிறகு கௌதம் ரவுகளிடம் ஐஸ்வர்யா புகைப்படத்தை காண்பித்து  உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் நீங்க வேணும்னா கிட்னாப் பண்ணுங்க பின் நீங்களே கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம் என்று சொல்கின்றார். அதைக் கேட்டு அந்த ஆட்கள் நல்ல ஆஃபர் தரிங்க என்று சந்தோஷப்படுகின்றனர்.. பிறகு கௌதம் பங்க்ஷன் ஹாலுக்கு எப்படி வரணும், எப்படி கிட்னாப் பண்றது எல்லாம் நான் சொல்றேன் என சொல்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது..