மணிரத்தினம் படத்தின் அடுத்த கதையை திருடி அப்படியே உல்டாவாக சொன்ன அட்லீ.? அலைய விடும் ஷாருக்கான்.

சினிமா உலகில் பல சிறந்த படங்கள் ஆண்டுதோறும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன அப்படி 80 90 கால கட்டங்களில்  மாபெரும் வெற்றி  பெற்ற கதைகளை தற்போது காலகட்டத்திற்கு ஏற்றவாறு இப்பொழுது இருக்கும் இயக்குனர்கள் அதனை மாற்றி வடிவமைத்து அதற்கு ஒரு புதிய பெயரை வைத்து படத்தை வெளியிடுகின்றனர்.

அப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளவர்தான் அட்லி. இவரை ரசிகர்கள் தற்பொழுது வரையிலும் விமர்சித்துக் கொண்டு தான் வருகின்றனர் இவர் பல படங்களின் கதையை ஒன்று சேர்ந்து புதிய படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் அட்லி.ஆனால் அட்லீ ரசிகர்கள் இதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது தான் உண்மை.ஆனால் நெட்டிசன்கள் அட்லி இயக்கிய படங்கள்எந்ததெந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதை தெள்ளத்தெளிவாக வீடியோவின் மூலம் சூட்டி காண்பித்தனர் இது மிகப்பெரிய அளவில் வைரலானது.

அந்த வகையில் இவர் எடுத்த ராஜா ராணி படம் மௌன ராகத்தில் கதை, தெறி சத்திரியன் படத்தின் கதை , மெர்சல் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை இதுபோன்ற இவர் தளபதி விஜய்யை வைத்து கடைசியாக பிகில் என்ற திரைப்படத்தை இயக்கிய இருந்தார். இப்படத்தின் இரண்டாம்பாதி  முழுவதும் பல ஹாலிவுட் படங்களை சார்ந்து இருந்தது அந்த  காட்சியையும் நெட்டிசன்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்.

இருப்பினும் அத்தகைய படங்கள் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் அட்லீக்கு நற்பெயரையும் சம்பாதித்துக் கொடுத்தது இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவின் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் மேலும் தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார் தற்போது இவர் ஹிந்தியில் அடி எடுத்து உள்ளார்.

ஹிந்தியில் முதல் படம் எடுக்கும் இயக்குனர் அட்லி அவரது பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி இந்தியின் முன்னணி நடிகர் ஷாருக்கானை கமிட் உள்ளார் என தெரிய வந்தது ஆனால் சமீப காலமாக இது பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லாமல் இருந்து வந்தது அதற்கு முக்கிய காரணம் கமலஹாசன் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படமான நாயகன் திரைப்படத்தின் கதையை அப்படியே உல்டாவாக பண்ணி ஷாருக்கானுக்கு கதையை கூறியுள்ளார்.

முழு கதையை கேட்ட ஷாருக்கான் இப்படத்தின் கதை அப்படியே கமலஹாசன் நடித்த நாயகன் படத்தை கூட இருப்பதாக கூறினார் ஷாருக்கான்  மேலும் அவர் எதுவும் கூறாமல் அட்லீ ஓரமாக் வைத்து இருக்கிறார். அட்லீ தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களை முன்னணி இயக்குனரான மணிரத்தினம் கதையை அப்படியே உல்டாவாக பண்ணி நடிகர்களுக்கு கதையை கூறி வருகிறார். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Comment