சில வருடங்களுக்கு முன்பு விஜயுடன் எடுத்த புகைப்படத்தை திடீரென வெளியிட்ட அட்லி.! எதற்காக தெரியுமா.!

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரின் துணை இயக்குனராக பணியாற்றி சங்கரிடம் இருந்து பல வித்தைகளைக் கற்றுக் கொண்டு தற்பொழுது பல படங்களை அட்லீ இயக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் ஹிந்தி சினிமாவின் டாப் நடிகரான ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதோடு இன்னும் இரண்டு வருடங்களுக்கு தமிழ் சினிமா பக்கமே தலை காட்டுவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

ஏனென்றால் தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு பிரபலம் அடைந்ததால் ஹிந்தி சினிமாவிலும் ஹிட் படங்களைக் கொடுத்து தன்னை பிரபலமாகி கொள்ள முடிவெடுத்துள்ளார்.ஏனென்றால் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

அந்த வகையில் விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர்களின் கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அட்லி திடீரென்று விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  அது என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தார்கள். அந்தவகையில் தெறி திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

அந்தவகையில் மேலும் Five years of theri, love you na,love you all. எனக்கூறி பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு.

173491142_791039321519032_5188449193705028392_n (2)
173491142_791039321519032_5188449193705028392_n (2)

Leave a Comment