அட்லி 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் தலைதெறிக்க ஓடிய பிரபல முன்னணி நடிகர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் மற்றும் எந்திரன் திரைப்படத்தில் சங்கருக்கு உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் அட்லி. அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு புது  இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயைவைத்து தெறி, மெர்சல், பிகில், ஆகிய மூன்று படங்களையும் இயக்கியுள்ளார். அதிலும் இவர் இயக்கிய அனைத்து திரைப்படம் காப்பி அடிக்கப்பட்டது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அட்லி அவர்கள் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஒரு விசாரணை அதிகாரியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படம் பெரும் செலவில் தயாராகி வருகிறது.

இதை தொடர்ந்து தெலுங்கில் இன்னொரு படம் இயக்க அட்லிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அல்லு அர்ஜுன் அடுத்தடுத்த வெற்றியை கொடுத்ததால் இவருக்கு 100 கோடி சம்பளம் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த திரைப்படத்தை இயக்க அட்லீக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக தெரிகிறது.ஆனால் அட்லி தனக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது தெரிந்த அல்லு அர்ஜுன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் அட்லீ இயக்கத்தில் நான் நடிக்கப் போவதில்லை எனறு தப்பிச் சென்றார் என கூறப்படுகிறது.

Leave a Comment