7 மணி காட்சியில் வெறும் 17 பேருடன் காத்து வாங்கிய தியேட்டர்..! என்னடா துணிவுக்கு வந்த சோதனை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் என்றால் மாமா அங்க பாருங்க பைத்தியம் அவர்களுக்கு அஜித் மற்றும் விஜய் எடுத்துக்காட்டாக சொல்லலாம். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருப்பது மட்டுமில்லாமல் இவர்களுடைய திரைப்படங்களும் மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தல அஜித் அவர்கள் மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில்  துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அதேபோல தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த இரண்டு திரைப்படங்களுமே நேற்று பிரமாண்டமாக திரையரங்கில் வெளியானது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த முதல் நாள் காட்சியில் டிக்கெட் கிடைக்காமல் தவித்த ரசிகர்கள் ஏராளமாக இருந்தார்கள் அந்த வகையில் துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியானது அதிகாலை ஒரு மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் 4 மணி காட்சிகள் கூட திரையிடப்பட்டது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் கூட தியேட்டரில் கலை கட்டியது இந்நிலையில்  அரவக்குறிச்சியில் ஒரு தியேட்டரில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது  அப்பொழுது ஒரு மணி காட்சி மற்றும் 4 மணி காட்சி ஆகிய இரண்டு காட்சிகளிலும் கூட்டங்கள் அதிகமாக இருந்தது ஆனால் 7 மணி காட்சிகள் மொத்தம் 17 பேர்கள் மட்டுமே பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.

இதனால் ஏழு மணி காட்சி அந்த தியேட்டரில் கேன்சல் செய்யப்பட்டதை தொடர்ந்து அதே நேரத்தில் அடுத்தடுத்த காட்சிக்கு ஏகப்பட்ட கூட்டம் வந்ததாக தகவல்கள் வெளியாகின ஆனால் இவை முழுக்க முழுக்க தியேட்டர் உரிமையாளர்களின் கவன குறைவால் ஏற்பட்ட பிரச்சனை ஆகும் ஏனெனில் அவர்கள் 7:00 மணி காட்சி ஒளிபரப்ப போகிறோம் என்பதை  முன்கூட்டியே  தெரிவிக்காத காரணத்தினால் ஒரு மணி மற்றும் நான்கு மணி காட்சிகள் மட்டும் என நினைத்துக் கொண்டு ரசிகர்கள் வராமல் போய்விட்டார்கள்.

Leave a Comment