லியோ படத்தில் திடீர் மாற்றம்.! ஷாக் கொடுத்த விஜய்.. என்ன நடந்தது? வெளியான தகவல்…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் இந்த கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அப்டேட் மற்றும் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில். படப்பிடிப்பு தளத்திலிருந்து ஏகப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தகவலின் படி லியோ படப்பிடிப்பு தளத்தில் சிறிது மாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது அதாவது காஷ்மீரில் குளிர் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் பொழுது சீக்கிரம் இருளாகிறது அதனால் காலையில் 8 மணி காட்சி எல்லாம் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் படக்குழுவினர் கரெக்டாக 8 மணிக்கு எல்லாம் வந்து விடுகிறார்கள் ஆனால் அவர்களுக்கெல்லாம் ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் நடிகர் விஜய். அதாவது படக்குழுவினர் 8 மணிக்கு வர சொன்னா நடிகர் விஜய் 7.15 மணிக்கு எல்லாம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விடுகிறாராம். இதைப் பார்த்ததும் பட குழுவினர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள் இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment