அம்மா செய்த ஒத்த தவறால் மொத்த வாழ்க்கையும் போயிடுச்சு.! புலம்பும் மீனா…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக அவதாரம் எடுத்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தன்னுடைய சினிமா வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்க மீனாவின் அம்மா மீனாவிற்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார் அது மட்டுமல்லாமல் அம்மாவின் ஆசைக்கு இணங்கி பிரபல தொழிலதிபரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நடிகை மீனாவிற்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரும் தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் நைனிகா நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதனைத் தொடர்ந்து நடிகை மீனாவும் சினிமாவில் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தார் ஆனால் அந்த நேரத்தில் தான் மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் தன்னுடைய கணவர் இறந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய நண்பர்கள் மீட்டெடுத்தனர்.

அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மீனா அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை கூறியிருந்தார் அப்போது தன்னுடைய அம்மா செய்த ஒரு தவறால் என்னுடைய மொத்த சினிமா வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டது என்று கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது நடிகை மீனா அவர்கள் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரத்தில் மீனாதான் நடிக்க வேண்டும் என்று ரஜினியும் கே எஸ் ரவிக்குமாறும் ஒற்றைக்காலில் நின்று இருக்கிறார்கள்.

ஆனால் இத்தனை நாட்களாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்த மீனா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் அவருடைய மார்க்கெட் குறைந்து விடும் என்று எண்ணி அந்த வாய்ப்பே வேண்டாம் என மறுத்துவிட்டாராம். ஆனால் நடிகை மீனாவிற்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டார் ஆனால் அவருடைய ஆசையை அவருடைய அம்மா நிறைவேற்றவில்லை.

ஆனால் அந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். படையப்பா படத்தில் இடம் பெற்று இருக்கும் நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரையிலும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து பலமுறை அதை நினைத்து வருந்தியது உண்டு என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment