தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஏ .ஆர். முருகதாஸ் – அதன்பின் தமிழ் சினிமாவில் தலை காட்டவே முடியவில்லையாம்.?

சினிமா உலகில் ஒரு பிரபலம் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தினால் போதும் அவர்கள் அசுர வளர்ச்சியை எட்ட முடியும் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ஏ ஆர் முருகதாஸ்.

இவர் இயக்கிய அனைத்துமே பஸ்டர் ஹிட் அடித்ததோடு சமூக அக்கறை உள்ள கருத்துகளை பொருத்தி இருந்ததால் இன்றும் மக்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இவர் எடுத்த ரமணா, சர்க்கார், கத்தி போன்ற படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் அதிகம் இருந்திருக்கும் மேலும் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சியை எட்டினார். தனது திறமைக்கு ஏற்றார்போல  சம்பளத்தையும் அதிகமாகி மாஸ் காட்டினார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி பல்வேறு படங்களை இயக்கி வெற்றி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் நடிகர் விஜய்யின் சர்க்கார் படத்தை எடுத்ததற்காக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார்.

சொல்லப்போனால் கைது செய்ய போலீசார் சென்று விட்டது அந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது காரணம் சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என பாக்கியராஜ் ஒரு பக்கம் கேஸ் போட மறுபக்கம் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முருகதாஸ் உடனடியாக பாக்கியராஜ் வீட்டிற்கு சென்று சமரசம் பேசி உள்ளார்.

ஆனால் பாக்யராஜ் தான் கோர்ட்டில் கேஸ் போட்டு உள்ளேன் நீதியின் படி தான் நடப்பேன் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டாராம். மேலும் முருகதாஸ் தன் வீட்டிற்கு வந்ததை மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிரவைத்தார் பாக்கியராஜ். இந்த பிரச்சனை இதுவரை முடிந்தபாடில்லை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்க ஒரு பக்கம் முருகதாஸின் மார்க்கெட்டும் அதள பாதாளத்தில் இறங்கி கொண்டே போகிறது.

Leave a Comment

Exit mobile version