துணிவு படத்தை பார்த்துவிட்டு பட்ட பகலில் வங்கியை கொள்ளை அடிக்க சென்ற நபர்.! வளைத்து பிடித்த ஊழியர்கள்..

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது.

இந்தப் படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நிலையில் அஜித் முன்பு நடித்த படங்களை போலவே இந்த படத்திலும் தன்னுடைய குழுவை வைத்து இந்தியாவில் வளர்ந்து வரும் யுவர் பங்கு என்ற வங்கியை கொள்ளையடித்து தன் வசப்படுத்துகின்றனர். மேலும் வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார்.

வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் வில்லனாக அஜித் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தொடர்ந்து துணிவு திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் துணிவு படத்தினை பார்த்த ஒருவர் அதே பாணியில் வங்கியை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் வாணி விலாஸ் சிக்னல் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது அந்த வங்கியில் காலை பணிக்காக ஊழியர்கள் வந்துள்ளார்கள் அப்பொழுது திடீரென உள்ளே புகுந்த ஒரு நபர் வங்கி ஊழியர்களின் மீது மிளகாய் பவுடர் மற்றும் மயக்க மருந்து ஸ்பிரே ஆகியவற்றை அடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சடைந்து அவர்கள் மயங்கி விழுந்தனர் உடனே அந்த வாலிபர் அங்குள்ள ஊழியர்களின் கைகளை கட்ட முயன்றார் அந்த சூழ்நிலையில் அவர்கள் கூச்சல் ஏற்ற நிலையில் அங்கு விரைந்து வந்த மேலாளர் மற்றும் மற்ற ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து ஒரு அறையில் வைத்து தர்மடி கொடுத்தனர் அவர் ஹிந்தியில் பேசியதால் வட மாநிலத்தவறாக இருப்பாரோ என்று போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் அங்கு வந்த அதிவிரைவு படையினரும் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் பூச்நாயகக்கன் பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் என்பது தெரியவந்துள்ளது.

thunivu 1
thunivu 1

மேலும் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் பல இடங்களில் வேலை செய்தும் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் ஒரு தொகையை கொள்ளை அடித்து வாழ்க்கையில் செட்டிலாக நினைத்து உள்ளார் என்பதும் துணிவு படத்தை பார்த்துவிட்டு அதுபோல கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.

thunivu 2
thunivu 2

மேலும் வங்கி கொள்ளை அடிக்க இவர் மட்டும் தானா இல்ல இவருடன் கூட்டாளிகள் யாராவது உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர் இவ்வாறு பட்ட பகலில் துணிவு படத்தை பார்த்து விட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த அந்த நபர் பற்றிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment