வாரிசு படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்.!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளுகின்றன. இதனால் விஜயின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போ தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு.

திரைப்படத்தில் விறுவிறுப்பாக  நடித்து முடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகி இருந்தாலும் இந்தப் படத்தில் ஆக்சன், காமெடி, காதல் என அனைத்தையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா..

ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற செய்ய படக்குழுவும் சரி, நடிகர்  விஜய்யும் சரி தொடர்ந்து அதற்கான வேலைகளில் பார்த்து வருகின்றன.

அண்மையில் கூட தளபதி விஜய் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது தளபதி விஜய் தனது வீட்டில் இருந்து காரில் வந்து இறங்கி ரசிகர்களை சந்தித்து சென்றார்.

vijay

இவர் வந்த காரில் விதிகளை மீறி கருப்பு நிற பிலிம் ஓட்ட போட்டு இருந்ததால் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் விதிகளை மீறி யானையை பயன்படுத்தி இருப்பதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவது உள்ளார் இதனால் வாரிசு படத்திற்கு அடுத்த பிரச்சனை வந்து காத்திருக்கிறது.

Leave a Comment

Exit mobile version