வசூலில் புதிய உச்சத்தை தோட்ட பொன்னியின் செல்வன் படம் – தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா.?

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே பிரமாண்டமான வசூலை அள்ளி உள்ளன அந்த வகையில் தற்போது ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது .  இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்..

கல்கி எழுதிய வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தான் இதை எடுத்தார். இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது.

இந்த படத்தை பலரும் போட்டி போட்டுக்கொண்டு பார்த்தனர் படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, கார்த்தி ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கிஷோர், ரகுமான், விக்ரம் மற்றும் பல நடிகர், நடிகைகள் சூப்பராக நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஓடியதால் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. இதுவரை மட்டுமே 450 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் அள்ளி உள்ளது. தமிழகத்தில் மட்டுமே இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய ஒரு புதிய சாதனை படைத்துள்ளது..

அதாவது தமிழகத்தில் மட்டும் இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 218 கோடி அள்ளி அசத்து இருக்கிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இதனால் படக்குழு சரி, இயக்குனர் மணிரத்தினமும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்..

Leave a Comment