வைல்ட்கார்ட் என்ட்ரியில் சர்ச்சை நாயகி சூடுபிடிக்கும் பிக்பாஸ்!! வைரலாகும் புகைப்படம்…

a new lady contestant in wild card entry biggboss season 4 photo: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 15 போட்டியாளர்கள் பங்குபெற்றனர் பின்னர் இரண்டு வாரங்களுக்கு பிறகு வைல்ட்கார்ட் என்ட்ரியில் அர்ச்சனா அவர்கள் போட்டியாளராக உள்ளே வந்தார். அவர் வந்ததுமே ஆட்டம் சூடு பிடிக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இவர் வந்த முதல் நாள் பெரும் பரபரப்பாக இருந்தது.

ஆனால் போக போக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை சக போட்டியாளர்கள் போலவே இவரும் இருக்கிறார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.  மீண்டும் தற்போது அர்ச்சனாவை தொடர்ந்துபாடகியு ம் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரப் போகிறார் என பேசப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவருகிறது. பாடகி சுசித்ரா இந்த லாக் சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் பலருக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு என்ன நடக்குமோ என ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே இவர் சுசிலீக்ஸ் என்ற பெயரில் நிறைய சர்ச்சையை எழுப்பி திரையுலகையே ஒரு ஆட்டம் காணவைத்தார். எனவே இவர் இந்த வீட்டிற்கு வந்தால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என கூறுகின்றனர். இதோ புகைப்படம்.

suchithra1
suchithra1

 

Leave a Comment