ஒரு கோடி மனுஷனுக்கு ஆயிரம் கோடி ஆசை.! சரத்குமாரின் ‘நானே மிருகமாய் மாற’ படத்தின் டிரைலர் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளிவரும் ஏராளமான படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இவருடைய எந்த ஒரு படமும் சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன் காரணமாக தற்பொழுது மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை பெற வேண்டும் என்பதற்காக தரமான கதை அம்சமுள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார் நடிகர் சரத்குமார். அந்த வகையில் ‘நானே மிருகமாய் மாற’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சத்திய சிவா இயக்க சசிகுமார் ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்க, டிடி ராஜாவின் செல்லூர் பிலிம் இந்த நேஷனல் படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல் தந்த படத்தின் முழு கதையும் அமைந்திருக்கிறது மேலும் இந்த படத்தில் வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுவதும் ரத்தக் கரை என சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த ட்ரெய்லரில் நடிகர் சசிகுமார் ஆசையே அழிவதற்கான வழி என்பது போல ஒரு கோடி மனிதனுக்கு ஆயிரம் கோடி ஆசை என வசனம் பேசி உள்ளார் ஒருவரின் ஆசையினால் எவ்வாறு பல இன்னல்களை சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதையும் இந்த படம் தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறது மேலும் தன்னுடைய குடும்பத்தினை காக்க மிருகமாக மாறி உள்ளார் சசிகுமார்.

இவ்வாறு இந்த ட்ரெய்லர் வைரலாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இவருடைய இந்த படம் மிகப்பெரிய வெற்றியினை பெறும். எனவே தற்பொழுது நானே மிருகமாய் மாற படத்தின் டிரைலர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment