சிவகார்த்திகேயனின் சினிமா சாம்ராஜ்யத்தை அடியோடு அழிக்க நினைத்த சினிமா குடும்பம்.? ஆத்தாடி என்ன ஒரு பலே திட்டம் தப்பிச்சன்டா சாமி.!

சினிமாவை பொருத்தவரை மிகப்பெரிய மாபியா கும்பல் ஒன்று செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது இதனை சினிமா துறையில் இருப்பவர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள். இந்த மாபியா கும்பல் ஒரு சில குறிப்பிட்ட நபர்களைத் தவிர யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் குறிக்கோளாக இருப்பார்கள் அதேபோல் இந்த மாபியா கும்பல் ஒருவரை சினிமாவிலிருந்து காலி பண்ண நினைத்தால் எந்த எல்லைக்கும் வேணாலும் செல்வார்கள்.

இது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து சினிமா துறையிலும் ஒரு மாபியா கும்பல் இருந்து கொண்டு தான் இருக்கிறது அவர்கள் கட்டுப்பாட்டில் சினிமாவை வைத்திருக்க நினைப்பார்கள் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அந்த மாபியா குடும்பம் அவர்களின் கட்டுக்குள் பிரபல நடிகையை வைத்துக்கொண்டு மாபியா போல் செயல்பட்டதாக மிகப் பெரிய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.

அப்படி இருக்கும் வகையில் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் குறித்து பல திடுக்கிடும்  தகவல்களை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலத்தில் சினிமாவில் உச்சத்தை அடைந்தார் அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் லிஸ்டிலும் இடம் பிடித்து விட்டார் அவருடைய வளர்ச்சி சினிமாவில் இருக்கும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என முழு மூச்சுடன் இறங்கினார்கள்.

சிவகார்த்திகேயனை சினிமாவில் டம்மியாக்க வேண்டும் அவருடைய சினிமா கேரியரை காலி செய்ய வேண்டும் என  சினிமா துறையை சேர்ந்த மாபியா கும்பல் குடும்பம் ஒன்று செயல்பட்டு உள்ளார்கள் இதன் நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து அந்த மாபியா கும்பல் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சுமார் நான்கு திரைப்படங்களுக்கு சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்தார்கள் ஆனால் புதிய திரைப்படம் எதுவும் தொடங்க முடியாமல் எந்த திரைப்படத்திலும் கமிட் ஆக முடியாமல் கடும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

இதனால் கடும் அப்செட் ஆன சிவகார்த்திகேயன் அந்த மாபியா குடும்பத்திடம் நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் ஐ திருப்பிக் கொடுத்து விடுகிறேன் அக்ரிமண்டை ரத்து செய்யுங்கள் நான் வேறு திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என கூறியுள்ளார் அதற்கு அந்த மாபியா குடும்பம் முடியவே முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டார்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் மூத்த கலைஞர் ஒருவர் நீங்கள் சூழ்ச்சி வலையில் சிக்கி விட்டீர்கள் உங்களை சினிமாவிலிருந்து காலி செய்வதற்காக தான் அந்த மாபியா குடும்பம் உங்களை ஒப்பந்தம் செய்துள்ளது என சிவகார்த்திகேயனிடம் எச்சரித்துள்ளார்.

பின்பு எப்படியாவது இதிலிருந்து மீள வேண்டும் என சிவகார்த்திகேயன் கடும் போராட்டத்திற்கு பிறகு அதில் இருந்து வெளியே வந்தார் ரெமோ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு கதறி அழுத பிறகு அந்த கண்ணீருக்கு பின்னணியில் சினிமா மாபியா என்று சொல்லக்கூடிய சினிமா குடும்பம் தான் காரணம் என பத்திரிக்கையாளர் ஒருவர் யாருடைய பெயரையும் வெளிப்படுத்தாமல் கூறியுள்ளார்.

சினிமா துறையை அடிக்கடி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த சினிமா மாபியா ஒரு குடும்பம் போல் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனை தங்களுடைய உறவினர் மூலம் ஒப்பந்தம் செய்து அவரை காலி செய்வதற்காகவே இப்படி செயல்பட்டு வந்ததாக கூறியுள்ளார்கள்.

Leave a Comment