நீண்ட வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவிற்குரிய ரீ என்ட்ரி கொடுக்கும் ரசிகர்களின் கனவு கன்னி.!

ஒருக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருந்த பிரபல நடிகை ஒருவர் நீண்ட காலங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஒரு சில நடிகைகள் தங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுவார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ரம்யா.

இவர் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்த நிலையில் அரசியலில் ஆர்வம் வந்ததால் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுவதுமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் இவருக்கு சில பணிகளிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் தான் சினிமாவில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ரம்யா சிம்பு நடிப்பில் வெளிவந்த குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் 2012ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரம்யா 2013ஆம் ஆண்டு மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் எம்பி தொகுதியில் 2013ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் அடுத்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

ramya
ramya

இவ்வாறு தேர்தல் தோல்விக்கு பின்னர் அவரது அரசியல் வேறுபாடு குறைந்துவிட்டது இப்படிப்பட்ட நிலையில் சுமார் ஆறு வருடங்களுக்குப் பின்னர் தற்பொழுது சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார். அதாவது தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்கள் தியேட்டர்கள் ரிலீஸ்காக உருவாக்கப்பட்டு வருவதாகவும், வெப் சீரியல்களையும் தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment