போதும்டா சாமி தயவு செஞ்சி நிருந்துங்க எதிர்நீச்சல் சீரியலை நிறுத்தக் கூறி கடிதம் போட்ட ரசிகர்.! பேட்டியில் பதிலளித்த திருச்செல்வம் இயக்குனர்..

தமிழ் சின்னத்திரையில் பிரபல இயக்குனர்களில் ஒருவர்தான் திருச்செல்வம் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒளிப்பதிவு கூட்டத்திலும் பணிபுரிந்து வந்தார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்டு இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார்.

இதன் பிறகு சின்னத்திரையில் சீரியல்கள் இயக்குவதை தொடர்ந்தார் அந்த வகையில் முதன் முறையாக இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான மெகா ஹிட் சீரியலான மெட்டி ஒலி என்ற தொடரினை இயக்கியிருந்தார். இதில் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோலங்கள் என்ற சீரியலையும் இயக்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு சீரியல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

எனவே அடுத்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் என பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார் திருச்செல்வம். இவ்வாறு இவர் இயக்கத்தில் அறிமுகமான அனைத்து சீரியல்களும் இல்லதரசிகளின் மத்தியில் நீங்கா இடத்தினை பெற்றது பெரும்பாலும் பெண்களின் வாழ்வினை மையமாக வைத்து சீரியல்களை இயக்கி வரும் நிலையில் தற்போது அதே போல் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

இதில் அப்பா மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தினையும் பிறகு தங்களுடைய கணவர்களால் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கும் பெண்களின் வாழ்க்கையின் கதையையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் சமீப பேட்டி ஒன்று அளித்துள்ள நிலையில் அது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும் அந்த கடிதத்தில் எதிர்நீச்சல் சீரியலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்ததாம் மேலும் அந்த கடிதத்தில் என்னுடைய மனைவி தினமும் 9:30 மணிக்கு உங்களுடைய எதிர்நீச்சல் சீரியலை பார்த்து விட்டு என்னை குணசேகரனாகவும் அவளை ஜனனியாகவும் நினைத்துக் கொண்டு அவரது நடவடிக்கை மொத்தமாக மாறி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பிறகு திருச்செல்வம் பேசிய வீடியோவில் தற்போது தான் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது சில சமயங்களில் இந்த மாதிரியான கருத்துக்கள் வருவது சகஜம்தான் அதற்காக இந்த சீரியலை நான் நிறுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை நிறுத்தியோ அல்லது மாற்றியோ விடாதீர்கள் என கருது தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment