ரஜினியின் சிலையை கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் ரசிகர்.! புகைப்படத்தால் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

Rajinikanth: ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் 3 அடியில் ரஜினியின் சிலை அமைத்து வீட்டில் வழிபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அப்படி கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது சமீப காலங்களாக ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்தினை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தனது 170 மற்றும் 171வது படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் குஷ்பூ, நயன்தாரா, சமந்தா, நிதி அகர்வால் போன்ற நடிகைகளுக்கு கோவில் கட்டி சிறை வைத்து ரசிகர்கள் வழிபட்டு வந்ததை பார்த்தோம்.

அந்த லிஸ்டில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். அதாவது மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரஜினிக்கு சிலை வைத்து கடவுளாக ரசிகர் ஒருவர் வழிபட்டு வருகிறார். திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் துணை ராணுவ படை வீரனான கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்ட தீராத பற்றால் ராசிபுரத்தில் செய்யப்பட்ட மூன்று அடி உயர ரஜினி சிலையை வீட்டிற்கு எடுத்து வந்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்துள்ளார்.

பின்னர் சிலையை பூஜை அறையில் வைத்து குடும்பத்துடன் சேர்ந்த தினசரி வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரஜினி ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.