நமீதாவுக்கு அடுத்து நீ தான்.. நடிகை சமந்தாவுக்கு “கோயில்” கட்டிய ரசிகர் வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் சமந்தா. இவர் முதலில் மாடலிங் துறையில் நுழைந்து பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு வெள்ளித்திரையில் அறிமுகமானார். பானா காத்தாடி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது திறமையும் கிளாமரையும் காட்டி நடித்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன குறிப்பாக உச்ச நட்சத்திர நடிகர்களான சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கிலும்..

வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருந்த இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் வெற்றி கண்டு வந்த சமந்தா திடீரெனநாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சினிமா தான் தனக்கு எல்லாம் என கருதிக் கொண்ட சமந்தா படங்களில் கிளாமர் காட்டி நடிப்பது மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கவர்ச்சி காட்டி வந்தார்.

இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சேவைகளையும் செய்ய ஆரம்பித்தார்.  அதில் ஒன்றாக சமந்தா பிரத்யூஷா என்ற அறக்கட்டையின் மூலம் பல சேவைகளை செய்து வருகிறார். ஒரு பக்கம் சேவை மறுபக்கம்  சினிமாவில் பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் தற்பொழுது சமந்தா கைவசம் குஷி மற்றும் ஒரு சில படங்கள் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் சமந்தாவுக்கு ஒரு ரசிகர் கோயில் கட்டி வருகிறார். அந்த ரசிகரின் பெயர் சந்திப்.. இவர் ஆந்திராவில் உள்ள குண்டூர் அருகே பாபட்லா மாவட்டம் அலபாடு கிராமத்தைச் கிராமத்தை சேர்ந்த இவர்  சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னது..

சமந்தா பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானத்தின் இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன நாளை திறப்பு விழா நடைபெறும்  எனக்கூறி உள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samantha-
samantha-

Leave a Comment