நம்ப வச்சு ஏமாத்திய இசையமைப்பாளர்..! 17 வருடங்களாக ஒதுக்கி வைத்த ஆண்ட்ரியா.

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பின்னணி பாடகியாக  திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இவரது அழகை பார்த்து  ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அதிகம் வந்தது ஆரம்பத்தில் தவிர்த்தாலும் ஒரு கட்டத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முதலில் கன்னத்தில் முத்தமிட்டாய் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை என பல படங்களில் நடித்தார் அந்த படங்களும் வெற்றி பெற்றது. அப்பொழுது ஆரம்பித்த அவரது வெற்றி பயணம் இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் அவர் நடிக்கும் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இப்பொழுது கூட ஐந்து ஆறு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் சூப்பராக ஓடிக் கொண்டிருந்தாலும் பழைய தொழிலையே அவர் பெரிதும் நேசிக்கிறார் ஆம் அவ்வபொழுது இசைக்கச்சேரிகளில் பாடி வருகிறார் இதனால் நடிகை ஆண்ட்ரியாவுக்கு நாலா பக்கமும் காசு வந்து கொண்டிருக்கிறது. இப்படி சினிமாவில் நல்ல விதமாக ஓடினாலும் நிஜ வாழ்க்கையில் சில சர்ச்சைகளில் சிக்கியும் இருக்கிறார் ஆண்ட்ரியா.

இவர் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்ததாக பல வதந்திகள் வெளியானது ஆனால் ஒரு கட்டத்தில் அதை உண்மை என இரண்டு பேருமே ஒத்துக்கொண்டனர் மேலும் இருவரும் முத்தமிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்பொழுது இருவரும் பிரிந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை அனிருத்தின் இசையில் ஆண்ட்ரியா பாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் இனிமேலும் இணைந்து பாடுவதற்கான சாத்திய கூறுகளும் இருக்காது எனக் கூறுகிறது.

Leave a Comment