மணிரத்தினத்திற்கு போட்டியாக இராஜராஜ சோழனின் வரலாற்று கதையை உருவாக்க போகும் பிரபல திரைப்பட இயக்குனர்.! தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு…

தமிழ் திரையுலையில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களை இயக்கி வருகிறார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் அடுத்ததாக அருண்மொழி சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படத்தை  இயக்க உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன் அதன் பிறகு ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவகதைகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தற்பொழுது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார் அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாக உள்ள திரைப்படமான வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் ராஜராஜ சோழன் மற்றும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக இயக்குனரும், நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கு அரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ் தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும்  ஆகச்சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க என் அன்புத் தம்பி வெற்றிமாறன் இந்த படங்களை இயக்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல்  வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள் என்று அம்பேத்கரின் புரட்சி மொழிக்கு ஏற்ப ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யார் என்று உலகத்திற்கு தெரிய வரும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment