சிம்புவுடன் நடித்ததால் சினிமா வாழ்க்கையை தொலைத்த பிரபல நடிகை.! தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய முழு நேரத்தையும் குடும்பத்திற்காக செலவிட்டு வருகிறார். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு சிம்பு படத்தில் நடித்ததுதான் தான் காரணம் என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் 2000 ஆண்டு வெளியான சுள்ளான் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சிந்து துலானி. அதன் பிறகு சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் என்ற திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகை சிந்து துலானி ஒரு காட்சியில் படுக்கையறை காட்சி மற்றும் முத்த காட்சியில் நடித்திருக்கிறார். அதன் பிறகு நடிகை சிந்து துலானிக்கு சரியாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் திரும்பினார் நடிகை சிந்து துலானி.

தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த சிந்து துலானி கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான சித்ராங்கடா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த சிந்து துலானி தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்தது தான் காரணம் என்று சிலர் கூறி வருகிறார்கள். மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள் ஆனால் அவருடைய மனநிலை என்னவென்று என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் ஆகையால் அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் படத்தில் நடிப்பதா இல்லையா என்று சிலர் கூறி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment