ஆடிஷன் என்ற பெயரில் பிரபல நடிகைக்கு நடந்த பா**ல் தொல்லை.! அவரே சொன்ன உண்மை தகவல்….

மலையாள சினேமாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவரை சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவர்கள் மீது இந்த இளம் நடிகை புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இளம் நடிகை ஒருவர் மலையாள சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவருக்கு சிலர் போன் செய்து தன்னுடைய அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறி ஆடிஷனில் கலந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

அவரும் லேடி சூப்பர் ஸ்டார் இன் படங்கள் என்றால் யார் தான் போக மாட்டார்கள் அதிலும் குறிப்பாக இவருடைய படத்தில் நடிக்க பல நடிகர் மற்றும் நடிகைகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் எப்படி மாட்டேன் என்று சொல்வேன் அது மட்டுமல்லாமல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் நடிகையின் தீவிர ரசிகை என்பதால் அவருடைய படம் என்றவுடன் நான் அங்கு சென்று விட்டேன் என்று அந்த நடிகை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அங்கு போன பிறகு தான் தெரிகிறது லேடி சூப்பர் ஸ்டாருக்கும் இவர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று. ஆடீசனில் கலந்துகொண்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்து கொண்டேன் ஆகையால் அடுத்ததாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறினார்கள்.

அதன்பிறகு அங்கிருந்த ஒருவர் உங்களுடைய முடியில் ஏதோ ஒன்று சிக்கி இருக்கிறது என்று கூறினார் அதன் பிறகு ஒரு தனி அறைக்கு சென்று முடியை சரி செய்து விட்டு வாங்க என்று கூறினார். அவருடைய பேச்சைக் கேட்டு நான் அந்த தனி அறைக்கு சென்ற உடனே பின்னாடியே வேறொரு நபர் பின் தொடர்ந்து வந்தார்.

அவரை கவனிக்காத நேரத்தில் தன்னை கட்டி பிடித்துக் கொண்டார் எவ்வளவோ கத்த முயற்சித்தேன் ஆனால் என்னால் முடியவில்லை எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று அங்கிருந்த கேமராவை தட்டிவிட நினைத்தேன் ஆனால் அதற்குள் அவருடைய கவனம் திசைமாறியது அந்த இடத்தை விட்டு எப்படியோ வெளியே வந்து விட்டேன் என்று அந்த பிரபல நடிகை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக தற்போது பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகிறார்கள் அதேபோல இந்த மலையாள நடிகையையும் தனக்கு நடந்த இந்த பாலியல் தொல்லையை கூறியது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Comment

Exit mobile version