விஜயகாந்தை ஒரு முறை பார்த்தால் போதும் நான் இறந்து விடுவேன் என கூறி கண் கலங்கிய பிரபல நடிகர்.!

ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது. மேலும் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கலக்கி வந்து பிறகு அரசியல் முலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபட்டவர் தான் நடிகர் விஜயகாந்த்.

சினிமாவில் இன்று இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. நடிகர் விஜயகாந்த் நடித்த நடிகர் நடிகைகள் பல விஜயகாந்த் எவ்வளவு உதவி கேட்டாலும் செய்வார், வயிறு நிறைய வைப்பார், நல்ல மனிதர் இவரைப்போல வேறு ஒருவரை பார்க்க முடியாது என சமீப பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.

ஆரம்பகால கட்டத்தில் இருந்தபோது இவருடன் ரசிகர் மன்ற நலத்திட்டங்கள் என்று பணியாற்றுவர் தான் வில்லன், நடிகர் பொன்னம்பலம். பொன்னம்பலம் விஜயகாந்த் நடித்து வந்த காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் மேலும் விஜயகாந்த் நடித்த ஏராளமான திரைப்படங்களில் இவர் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இவ்வாறு அந்த காலகட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல் வில்லன் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருந்து வருவது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பொன்னம்பலம் விஜயகாந்தை பற்றி கூறியுள்ளார்.

ponnabalam
ponnabalam

அதாவது பொன்னம்பலத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் மேலும் இவருக்கு ஆபரேஷங்களும் செய்யப்பட்டுள்ளது இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜயகாந்த் உடன் தனது அனுபவத்தை சமீபத்தில் கூறியுள்ளார். அதாவது நான் விஜயகாந்த் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன் அவர் எனக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார் எனக்கு உடல்நிலை மிகவும் சரியில்லை நான் ஒரு முறையாவது விஜயகாந்த் பார்த்துவிட்டால் உடனடியாக நான் இறந்து விடுவேன் என்று கண்கலங்கியபடி பொன்னம்பலம் கூறியுள்ளார்.

Leave a Comment