ஜெயிலர் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து பேசிய பிரபலம்.! இணையத்தில் வைரலாகும் தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நெல்சன் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து உள்ளார்.

அண்ணாத்தே’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லாலுடன் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவ ராஜ்குமார், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், படம் விரைவில் பெரிய திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த  வசந்த் ரவி அவர்கள் ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

அதாவது  இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும், இதுவரை அவர் நடித்த 169 படங்களில் இருந்தும் இது வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. வசந்த் ரவி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நிலையில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கடுமையான ஜெயிலராக நடிக்கிறார், ஆனால் குற்றவாளிகளிடம் கருணை காட்டுகிறார்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது ஜெயிலர் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கு டி.ஜே.ஞானவேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளார், மேலும் அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்.

சமீப காலமாக நடிகர் ரஜினி நடிக்கும் எந்த படமும் சரியாக வரவேற்ப்பு பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். விரைவில் ஜெயிலர் வெளியாகி வெற்றி பெரும் என்று நம்புவோம்.

Leave a Comment