ரசிகர் பலியானதால் நடிகர் அஜித் மீது கொலை வழக்கு பதிவு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துணிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியானதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் துணிவு படம் வெளியான முதல் நாள் ஒரு மணி சோவை பார்க்க ரோகினி திரையரங்கிற்கு முன் ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் குவிந்தது. இந்த நிலையில் டிக்கெட் பெற்றவர்களும் டிக்கெட் பெறாதவர்களும் ரோகிணி திரையரங்கின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் அந்த அளவிற்கு கூட்டங்கள் அலைமோதியது.

இதனை தொடர்ந்து அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் அந்த ரசிகர் உயிரிழந்ததால் நடிகர் அஜித் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அஜித்தின் துணிவு படத்தை ரோகிணி திரையரங்கிற்கு பார்க்க வந்த 19 வயது உடைய பரத்குமார் என்பவர் சாலை வழியே சென்று இருந்த லாரி மீது ஏறி நடனம் ஆடினார் அப்போது நடனமாடிக் கொண்டே கீழே குதித்த போது பரத்துக்கு முதுகு தண்டில் பலத்த காயம் அடைந்து உள்ளது. இவருடைய கதிரலை சுற்றியிருந்த அஜித் ரசிகர்கள் பார்த்து அவரது உதவிகளுடன் ரசிகர் பரத் குமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு சிகிச்சை பலனின்றி பரத் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நடிகர் அஜித் மீது கிருமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment