கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 வயது கர்ப்பிணி பெண். ! குழந்தையும் துடிதுடித்து மரணம். ! நெஞ்சை பதற வைக்கும் தகவல்

A 27-year-old pregnant woman suffering from corona virus : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, அதனை கட்டுப்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள் இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ்  தமிழகத்தில் 27 வயதான பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார், இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த பெண்ணிற்கு பிரசவம் நடைபெற்றுள்ளது, அப்பொழுது ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவம் நடந்து கொண்டிருந்தபோதே அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, அந்தக் கொரோனா பரிசோதனை முடிவு வெளியே வருவதற்கு முன்பு அந்தப் பெண்ணும் பிறந்த குழந்தையும் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

coronovirus
coronovirus

அந்த குழந்தைக்கு மற்றும் பெண் இறந்த செய்தியைக் கேட்ட அவரது குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர், பின்னர் மருத்துவமனையில் இருந்து இறந்தவர்களின் சடலங்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இறுதி சடங்குகளை செய்தனர், மேலும் அந்த மருத்துவமனையில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் செவிலியர்கள் அடக்கம் செய்த குடும்பத்தினர் யாரும் எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் உயிரிழந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாருக்கெல்லாம் கொரோனா நோய் தோற்று இருக்கிறது என்ற மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

coronovirus
coronovirus

Leave a Comment