ராஜகோபாலன் போல் என்னிடமும் ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்.! உண்மையை போட்டு உடைத்த 96 பட நடிகை குட்டி ஜானு.!

சமீபத்தில் தமிழகத்தில் மக்களிடையே பரபரப்பைக் கிளப்பிய தகவல் என்றால் அது சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் நடந்தது பற்றி தான் சமீபத்தில் மக்களிடையே மிக பெரிய சர்ச்சை எழுந்தது.

தமிழ்நாட்டிலுள்ள பல பள்ளிகளிலும் இதே போன்ற செயல்கள் நடந்து வருகிறது மாணவிகளிடம் தப்பாக ஆசிரியர்கள் பேசுவதும் தப்பான செயல்களில் ஈடுபடுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது இதற்கு எப்பொழுதுதான் முற்றுப்புள்ளி என மகள்களும் மற்றும் சினிமா பிரபலங்களும் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆம் சென்னையில் உள்ள பிஎஸ்பிபி என்ற பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்டது தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை கிளப்பி இதனை பற்றி பல அரசியல் வாதிகளும் பல சினிமா பிரபலங்களும் இந்த ஆசிரியருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில சினிமாப் பிரபலங்கள் தங்களுக்கும் இதே போல் நடந்து உள்ளது எனவும் புதிய புதிய தகவல்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள் இந்நிலையில் நடிகை கௌரி கிஷன் மாணவிகளுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளாராம்.

அதில் அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் நான் படித்த பொழுது என்னிடம் ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் ஆனால் அப்போது மானத்தால் அதை நான் வெளியே சொல்லவில்லை அதனால் இப்பொழுது வருத்தப்படுகிறேன்.

jaanu
jaanu

ஏனென்றால் அப்பொழுது மட்டும் அந்த விஷயத்தை வெளியே சொல்லி இருந்தால் இதே போல் பலருக்கும் நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த பல சினிமா பிரபலங்களும் உங்களுக்கும் இப்படி நடந்துள்ளதா என சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment