விஜய், அஜித் பட நடிகை மந்திராவை ஞாபகம் இருக்கிறதா.! பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து ஹீரோயின் போல் அழகாக இருக்கும் புகைப்படங்கள்..

ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்கள் செய்யும் சில தவறுகளினால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுகிறது எனவே இதனால் சினிமாவை விட்டு விலகிய பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மந்திரா.

இவர் தமிழில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் மேலும் தமிழினைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த வகையில் தமிழில் அஜித் நடித்த இரட்டை ஜடை வயசு, விஜய்யின் லவ் டுடே போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

பிறகு சினிமாவில் இருந்து விலகிய மந்திரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் வால், ஜீவாவின் கவலை வேண்டாம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மந்த்ராவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது எனவே சில காலங்களாக படங்களின் நடிப்பதை நிறுத்திவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் அம்மணி தனது உடல் எடையை குறைத்து ஹீரோயினாக நடிக்க முடிவெடுத்துள்ளார்.

manthra
manthra

இவ்வாறு தமிழில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் அந்த வகையில் இவர் விளம்பர திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நேரத்தில் பிரபல பத்திரிகை ஒன்று இருக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது தற்பொழுது நான் தெலுங்கில் மா என்ற சேனலில் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறேன் அந்த சீரியலுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

manthra
manthra

அது மட்டும் இல்லாமல் சில படங்களும் செய்துக் கொண்டிருக்கிறேன் குடும்பம் நடிப்பு என்று இரண்டையுமே சமமாக பேலன்ஸ் செய்துக் கொண்டு போகிறேன் அதேபோல் தமிழில் நடித்த நிறைய ஞாபகங்கள் எனக்கு இருக்கிறது ஆனால் சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் என்னை கூப்பிடுறது இல்லை ஏன் நம்மை கூப்பிடவில்லை  என்று நான் நினைத்துக் கூட பார்த்திருக்கிறேன்.

manthra
manthra

எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஷூட்டிங் என்று வந்துவிட்டால் நான் பக்காவாக வந்து விடுவேன் இதை நான் நடித்த படங்களின் இயக்குனர்களிடம் கேட்டு கொள்ளுங்கள் என்னை கூப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக எனக் தோணுவது நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை என்று நினைக்கிறேன் அது என்ன சோசியல் மீடியா பக்கம் என்னால் போகவே முடியவில்லை என்னுடைய நண்பர்கள் கூட ரீல்ஸ் எல்லாம் ஏன் போட மாட்டேங்குற என்று கேட்பார்கள் என்னால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க முடியாது என்று பார்க்கிறேன் அதே சமயம் தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் வந்தாலும் நான் நடிப்பேன் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

Leave a Comment